'மதுபான பார்' மீண்டும் திறக்கப்படும்... கேரள நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் அறிவிப்பு

மீண்டும் கேரளாவில் மதுபான பார்கள் திறக்கப்படும் என்று அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் மூடப்பட்ட மதுபான பார்கள் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் முதல்வர் உம்மன் சாண்டி, அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் மதுவே இல்லாத நிலை உருவாகும் அதற்கு முதல்படியாக 100 மதுபான பார்கள் மூடப்படுகின்றன என்று கூறியிருந்தார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக கேரளாவில் மதுபான பார்கள் மூடப்பட்டிருந்தன.

Bars Could Re-Open, Says Kerala Minister Thomas Isaac

இந்த நிலையில், இடது முன்னணி கேரளாவின் ஆட்சியில் அமர்ந்தது. இதனையடுத்து, அரசுக்கு சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும், அதற்கு அடிப்படையான காரணம் மதுபான பார்கள் மூடப்பட்டதே அதனால் அவற்றை விரைவில் திறப்போம் என்று கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஈசாக் கோரியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் அரசு, மதுவில்லா கேரளா 2023 என்ற இலக்கை மையமாகக் கொண்டு 700 மதுபான பார்களை முடியாது. மேலும் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட இந்தியா முழுமைக்கும் உத்தரவிட்டது.

கேரளாவில் தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்ட கருத்தரங்குகள், மீட்டிங்குகள் இலங்கைக்கும் கோவாவுக்கும் சென்றுவிட்டதால் சுற்றுலா வருமானம் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இதனால் கேரள மாநில அரசின் முக்கிய துறையான சுற்றுலாத்துறையின் வருமானம் சுமார் 5,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இதனால் மீண்டும் சுற்றுலா துறை வருமானத்தை பெறவேண்டுமானால் சுற்றுலா தளங்களில் உள்ள மதுபான பார்கள் மீண்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+