பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்றியது காங்.-ம.ஜ.த கூட்டணி! மேயரானார் மஞ்சுநாத் ரெட்டி
பெங்களூர்: பெருநகர் பெங்களூர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலின்போது, தனிப்பெரும் கட்சியாக உருவாகியிருந்த பாஜகவுக்கு எதிராக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் கை கோர்த்து வெற்றி பெற்றன. இதனால் மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
198 வார்டுகளை கொண்ட பெருநகர் பெங்களூர் மாநகராட்சிக்கு (BBMP) நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 100 வார்டுகளை வெற்றி கண்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 76 சீட்டுகளையும், ம.ஜ.த 14 சீட்டுகளையும் வென்றன. பிறர் 8 சீட்டுகளை வென்றனர்.

மாநகராட்சியில் மேயர் பதவி மற்றும் துணை மேயர் பதவியை கைப்பற்ற 131 வாக்குகள் தேவை. ஏனெனில், மேயர் தேர்தலில் பெங்களூரை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் மற்றும் ராஜ்யசபா, மக்களவை எம்.பிக்களும் வாக்களிக்க தகுதியுடையவர்களாகும்.
இந்த அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் இணைந்து மாநகராட்சியை கைப்பற்றிவிட முடியும். இதை கருத்தில் கொண்டுதான், கவுன்சிலர்கள் அல்லாத பிறர் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று கூறி ஹைகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். அதேநேரம், தேர்தல் முடிவுகள், வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அதற்கும் மாநகராட்சி உட்பட்டே ஆக வேண்டும்.
இந்நிலையில்தான், மிகுந்த பரபரப்புக்கு இடையே இன்று மதியம், 12 மணியில் இருந்து 1 மணிக்குள் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக கவுன்சிலர்கள் 198 பேரும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதன்பிறகு மேயர் வேட்பாளராக காங்கிரசை சேர்ந்த மஞ்சுநாத ரெட்டி, துணை மேயராக ம.ஜ.தவை சேர்ந்த ஹேமலதா கோபாலய்யா ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பாஜக சார்பில் மஞ்சுநாத் ராஜு மேயர் பதவிக்கும், நாகரத்னா துணை மேயர் பதவிக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து வாக்குப்பதிவு ஆரம்பித்தது. இதில் 131 வாக்குகளை பெற்று மஞ்சுநாத ரெட்டி வெற்றி பெற்றார். மொத்தம் 260 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தனர். அதில் விஜய் மல்யாவை தவிர்த்த 259 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 1 சுயேச்சை தவிர்த்து 7 சுயேச்சைகள் காங்கிரசுக்குதான் வாக்களித்துள்ளனர். எனவே பெரும்பான்மை வாக்கு பெற்ற மஞ்சுநாத ரெட்டி வெற்றி பெற்றார். இவர் மடிவாளா வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications