மகாராஷ்டிராவில் திடீர் தேர்தலுக்கு தயாராகுங்கள்: கட்சியினருக்கு சரத் பவார் வேண்டுகோள்
மும்பை: மகாராஷ்டிராவில் திடீர் தேர்தலுக்கு தயாராகுமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதிலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 288 பேரை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜகவுக்கு 121 உறுப்பினர்கள், சிவசேனாவுக்கு 63 பேர், காங்கிரஸுக்கு 42 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 41 பேர் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அலிபாக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்கியது. கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் சரத் பவார் கூறுகையில்,
மகாராஷ்டிராவில் நடக்க உள்ள திடீர் தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். பாஜகவில் உள்ள சிலரால் தான் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைவது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு அன்று என்றார்.
பாஜக அரசு 5 ஆண்டு பதவியில் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று பவார் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications