Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிதான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பிரிவு.. நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூரில் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாட்டிலேயே முதல் முறையாக அரிதான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சிகிச்சை மையம் பெங்களூர் இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் சைல்ட் ஹெல்த் (Indira Gandhi Institute of Child Health) மருத்துவமனை, பெங்களூர் சாந்திநகர் அடுத்த லக்சந்திரா பகுதியில் அமைந்துள்ளது.

Bengaluru is treating rare diseases

இங்குதான், அரிதான நோய்க்கான சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அரிதான நோய் தடுப்பு வார்டு மற்றும் இலவச சிகிச்சையளிக்கும் வசதி 'அரிதான நோய் இந்தியா நிறுவனம் (ORDI)' அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

ஓஆர்டிஐ அமைப்பின் இணை நிறுவனர் பிரசன்ன குமார் கூறுகையில், இது பெரிய விஷயம்தான், ஆனாலும் நோய்களை குணப்படுத்துவதில் சிறு அடிதான் முன் நோக்கி வைத்துள்ளோம். நோய்கள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையும், போதிய பரிசோதனைகளை செய்யாததும்தான் அரிதான நோய்களை குணப்படுத்த முடியாததற்கு காரணம். பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையம், அந்த குறையை போக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பெங்களூரில் அரிதான நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்ட பிறகு, அதுபோன்ற அறிகுறிகளுடன் வந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அங்கேயே சிகிச்சையளிக்க முடிந்த நோயாளிகளுக்கு அங்கேயும், வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்து மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு அந்த உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+