தெருவில் நடந்து சென்ற பெண் மானபங்கம்.. 4 பேரை கைது செய்தது பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: சாலையில் நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 1ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற இளம் பெண்ணை ஸ்கூட்டரில் வந்த இரு வாலிபர்கள் சேர்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிசிடிவியொன்றில் பதிவாகி அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் லீனோ மற்றும் ஐயப்பா ஆகியோரும், அவர்களுக்கு உடந்தையாக இறுந்ததாக ராஜு மற்றும் சின்னு ஆகிய இருவரும் என மொத்தம், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும், பிரேசர் டவுன் பகுதியில் குடியிருக்கும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், சரக்கு வேன் டிரைவர். இருவர் கூரியர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார்கள். மற்றொருவர் பி.காம் மாணவராகும்.
இதில் இருவர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் டெலிவரி பாயாக பார்ட்-டைம் வேலை பார்க்கிறார்கள். இந்த ரெஸ்டாரண்டிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் அவ்வப்போது ஹோம் டெலிவரி செய்வது வழக்கமாம். அப்போது இந்த வாலிபர்களில் ஒருவர்தான் ஹோம் டெலிவரி செய்ய வீட்டுக்கு வருவாராம். அப்போதுமுதல், அந்த பெண் மீது மோகம் கொண்டு இருந்துள்ளனர்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கொடூர எண்ணத்தை புத்தாண்டு இரவு நேரத்தில் அரங்கேற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது இ.பி.கோ 341, 354ஏ, 354பி பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications