தெருவில் நடந்து சென்ற பெண் மானபங்கம்.. 4 பேரை கைது செய்தது பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: சாலையில் நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 1ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற இளம் பெண்ணை ஸ்கூட்டரில் வந்த இரு வாலிபர்கள் சேர்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிசிடிவியொன்றில் பதிவாகி அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் லீனோ மற்றும் ஐயப்பா ஆகியோரும், அவர்களுக்கு உடந்தையாக இறுந்ததாக ராஜு மற்றும் சின்னு ஆகிய இருவரும் என மொத்தம், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும், பிரேசர் டவுன் பகுதியில் குடியிருக்கும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், சரக்கு வேன் டிரைவர். இருவர் கூரியர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார்கள். மற்றொருவர் பி.காம் மாணவராகும்.
இதில் இருவர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் டெலிவரி பாயாக பார்ட்-டைம் வேலை பார்க்கிறார்கள். இந்த ரெஸ்டாரண்டிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் அவ்வப்போது ஹோம் டெலிவரி செய்வது வழக்கமாம். அப்போது இந்த வாலிபர்களில் ஒருவர்தான் ஹோம் டெலிவரி செய்ய வீட்டுக்கு வருவாராம். அப்போதுமுதல், அந்த பெண் மீது மோகம் கொண்டு இருந்துள்ளனர்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கொடூர எண்ணத்தை புத்தாண்டு இரவு நேரத்தில் அரங்கேற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது இ.பி.கோ 341, 354ஏ, 354பி பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications