பதன்கோட் தாக்குதல்: உயிர் தியாகம் செய்த லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் உடலுக்கு இறுதி அஞ்சலி
பெங்களூரு: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது, அது வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், 22 பலியானார். அவருடைய உடல் பெங்களுக்கு கொண்டு வரப்பட்டது. பெங்களூரு பெல் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிரஞ்சன் உடலுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார். நிரஞ்சனின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
பதன்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தேசிய பாதுகாப்பு படை லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்ததால், வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விமான தளத்தில் பதுங்கியிருந்த மேலும் 2 தீவிரவாதிகள் இன்று திடீரென தாக்குதலை அரங்கேற்றினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருவதால், அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க ராணுவத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவனின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது, அது வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன், 32 பலியானார்.
நிரஞ்சனின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தொட்ட பொம்மசந்திரா என்ற இடத்தில் வசித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரைவைச் சேர்ந்த அவரது வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டு நிரஞ்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நிரஞ்சனின் மரணம் தங்களுக்கு தாங்க முடியாது இழப்பு என்றாலும் அவர் நாட்டுக்காக உயிர் துறந்ததை நினைத்து பெருமைகொள்வதாக நிரஞ்சனின் சகோதரி தெரிவித்தார்.
நிரஞ்சனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது பூர்வீகம் கேரளா. ஆனால், பின்னர் பெங்களூருவில் குடியேறினர். இவருக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இன்று அவரது உடல் பெங்களூர் கொண்டு வரப்பட்டது. லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சனின் உடலுக்கு பெங்களூரு பெல் மைதானத்தில் இறுதி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா நிரஞ்சனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நிரஞ்சனின் பூர்வீகம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எலம்பச்சேரி கிராமம் ஆகும். அவரது மனைவிக்கும் அதே ஊர்தான். இறுதிச்சடங்குக்காக நிரஞ்சனின் உடல் அவரது சொந்த ஊரான எலம்பச்சேரி கிராமத்துக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications