பெங்களூருவில் நூற்றில் ஒருவர் கமிஷனரை ஃபாலோ செய்கிறார்களாம்!
பெங்களூரு: பொதுமக்களிடம் நெருங்கி பழகுவதற்காக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தொடங்கிய டிவிட்டர் கணக்கு ஒரு லட்சம் ஃபாலோவர்களை குறைந்த காலத்திலேயே பெற்று அசத்தியுள்ளது.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக எம்.என்.ரெட்டி பதவியேற்ற பிறகு, பொதுமக்களுடன், காவல்துறையை நெருக்கமாக்க தேவைப்படும் முயற்சிகளை எடுத்தார். அதன் ஒரு ஆயுதமாக, டிவிட்டரை கையில் எடுத்தார். @CPBlr என்ற பெயரில் டிவிட்டர் அக்கவுண்ட் தொடங்கினார்.

இந்த அக்கவுண்ட் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதற்கு காரணம், பொதுமக்கள் எந்த புகாராக இருந்தாலும் டிவிட்டர் வழியாக தெரிவிக்கலாம் என்ற வசதிதான்.
சாலையில் செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டும் பள்ளி டிரைவரை போட்டோ எடுத்து, அதை டிவிட்டரில் கமிஷனருக்கு மென்ஷன் போட்டுவிடுவதில் தொடங்கி, விபச்சாரம், கொலை உள்ளிட்ட பல விஷயங்களில் உடனடியாக கமிஷனருக்கு தகவல்கள் கொடுக்க தொடங்கினர் பொதுமக்கள்.
போன் மூலம் வரும் தகவல்களைவிட, டிவிட்டர் தகவல்கள் நம்பகத்தன்மை அதிகமுள்ளவையாக இருப்பதை உணர்ந்த போலீசாருக்கு, குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டிவிட்டர் உதவிகரமாக இருந்தது. மேலும், டிவிட்டர் புகார்களுக்கு, காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளையும் எடுத்தது. மீடியாக்கள் உதவியால் இந்த தகவலை அறிந்து கொண்ட பெங்களூரு மக்கள், பெருமளவில் ரெட்டியை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர்.
இதன்விளைவாக, குறுகிய காலத்திலேயே, 1 லட்சம் ஃபாலோவர்களை தொட்டுள்ளார் பெங்களூரு போலீஸ் கமிஷனர். சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் சராசரியாக நூற்றில் ஒருவர் கமிஷனரை டிவிட்டரில் ஃபாலோ செய்துவருகிறார்கள். இதன் மூலம், கமிஷனரின் கவனத்திற்கு எவ்வளவு விஷயங்கள் சென்றடையும் என்பது பிரமிக்கத்தக்க விஷயம். இதைத்தான் காவல்துறை எதிர்பார்க்கிறது.
GOOD MORNING, ALL MY DEAR FOLLOWERS. CONGRATS!! WE HAVE REACHED THE 100 K MARK!! BCP'S GREAT LEAP IN BECOMING TRULY CITIZEN-CENTRIC (1/N)
— M N Reddi, IPS (@CPBlr) April 20, 2015 அதேநேரம், 7 கோடி மக்கள் தொகை கொண்ட ஒட்டுமொத்த கர்நாடக முதல்வரான சித்தராமையாவை டிவிட்டரில் ஃபாலோ செய்வோர் எண்ணிக்கை இன்னமும் 20 ஆயிரத்தை கூட தொடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications