பால்கனியில் போன் பேசிய போது விபரீதம்.. 9ம் மாடியில் இருந்து விழுந்து இன்ஜினியர் பலி
பெங்களூருவில் பால்கனியில் நின்று போன் பேசிய பொறியாளர் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
பெங்களூரு: பெங்களூருவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, 28 வயது இளைஞர் ஒருவர் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெள்ளந்தூரில் தனது ஐந்து நண்பர்களுடன் கௌதம் என்ற மென்பொருள் பொறியாளர் கடந்த வியாழனன்று இரவு ஹோலி கொண்டாடி உள்ளார்.

இரவு 11 மணியளவில் கௌதமிற்கு அவர்களது பெற்றோர் போன் செய்துள்ளனர். அவர்களுடன் பேசுவதற்காக அவர் பால்கனிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பால்கனி சுவரில் சாய்ந்த அவர், நிலை தடுமாறி ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அந்தக் கட்டிடத்தின் காவலாளி, கௌதம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கௌதம் கீழே விழுந்து 15 நிமிடங்களுக்குப் பிறகே அவர்களது நண்பர்களுக்கு விசயம் தெரிந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கௌதமின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கௌதமின் சகோதரி அளித்த புகாரின் பேரில் கௌதமின் மரணம் எதிர்பாராத விபத்தா அல்லது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோலி கொண்டாட்டத்தின் போது, இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications