சமண கோயிலிலிருந்து கடத்தி சென்று, சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பழி வாங்கப்போவதாக பிரக்யா ஆவேசம்
Recommended Video
போபால்: 12 வயது சிறுமியை சமண கோயிலில் இருந்து கடத்திச் சென்று, பலாத்காரம் செய்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 18 வயதேயான படுபாதகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமண மத கோயிலுக்கு சம்பவத்தன்று தனது 16 வயது உறவுக்கார பெண்ணுடன் 12 வயது சிறுமி சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட அவினாஷ் சாஹு (18) என்ற இளைஞர், சிறுமி தனியாக நின்றபோது நைசாக பேசி வெளியே கூட்டிச் சென்றுள்ளார்.

இதன்பிறகு வெளியே மறைவான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்ற இந்த இளைஞர், அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அவர் தலைமீது கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த, சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில், அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, போபால் தொகுதி, பாஜக வேட்பாளரான பிரக்யா சிங் தாக்கூர், இந்த சம்பவத்திற்காக, மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது. முதல்வர் கமல்நாத் அவரது ச்சின்ட்வாரா தொகுதிக்கு மட்டுமே முதல்வராக உள்ளார் என்றும், இந்த சம்பவத்திற்கு பழிவாங்காமல் விடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொல்லப்பட்ட சிறுமியின் அம்மாவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் பிரக்யா சிங் தாக்கூர்.












Click it and Unblock the Notifications