பூடானின் ஹைட்ரோ பவர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்.. அசாம் மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு
திஸ்பூர்: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாமில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பூடான் நாட்டிலிலுள்ள ஹைட்ரோ பவர் அணையிலிருந்து, அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டுள்ள காரணத்தால் அசாமில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசாமின் 20 மாவட்டங்களில் 34 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 933 நிவாரண முகாம்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூட்டானின் ட்ரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் நிறுவனமானது கிழக்கு பூடானில் 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் குரிச்சு என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ட்ரக் கிரீன் பவர் நிறுவனமானது தன் திட்டத்தை செயல்படுத்தி வரும் 55 அடி உயர அணையிலிருந்து, அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற போவதாக அறிவித்திருந்தது.
நேற்று முன் தினம் அறிவித்தபடி பூடானின் குரிச்சு நீர் மின் நிலையத்தின் அணையில் இருந்து, இன்று அதிகாலை அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கீழ் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்கள் எச்சரிக்கையாக உள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பார்பேட்டா மாவட்டத்தில், பெக்கி மற்றும் பஹுமாரா நதி கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று அதிகாலை பூடானிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பார்பேட்டாவை அடைய பல மணிநேரம் ஆகும். எனினும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று அம்மாநில துணை ஆணையர் முனீந்திர சர்மா கூறியுள்ளார்.
பூடானால் குரிச்சு திட்ட அணையிலிருந்து விடுவிக்கப்பட்ட நீர் அசாமிலுள்ள பல மாவட்டங்களுக்கு பாயும் என்பதால், மாவட்ட நிர்வாகங்கள் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளன. மேலும் அவசரநிலைகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பார்பேட்டா தவிர, கோக்ராஜர், பக்ஸா, சிராங், பொங்கைகான் மற்றும் கம்ரூப் மாவட்டங்களின் சில பகுதிகள் பூட்டான் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் நீரால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர், என்று பக்ஸா மாவட்ட துணை ஆணையர் பாஸ்கர் பெகு கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications