ஆடைக்குள் 20 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கொச்சி ஏர்போர்ட்டில் கைது
கொச்சி: ஆடைக்குள் மறைத்து வைத்து துபாயில் இருந்து கொச்சிக்கு 20 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் விமான நிலையத்தில் சிக்கினர்.
துபாயில் இருந்து கொச்சிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை துபாயில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியது.
அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது திருச்சூர் மற்றும் கோழிக்கூட்டை சேர்ந்த 2 பர்தா அணிந்த பெண்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் இருவரும் தங்கள் ஆடைகளில் 20 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.5.8 கோடியாகும். அந்த இருவரும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தான் கொச்சியில் இருந்து துபாய் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதுவரை பிடிக்கப்பட்ட கடத்தல் தங்கத்தில் முதன்முறையாக அதிகபட்சமாக 20 கிலோ தங்கம் தற்போது தான் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications