மாவோயிஸ்டுகளுக்கு உளவு... பீகாரில் சி.ஆர்.பி.எப் அதிகாரி கைது
பாட்னா: மாவோயிஸ்டுகளுக்கு உளவு பார்த்ததாக பீகார் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் சில மாதங்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப்படும் பிரதீப் யாதவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது கயாவில் முகாமிட்டிருக்கும் 15வது சி.ஆர்.பி.எப். பட்டாலியன் துணை கமாண்டர் சஞ்சய் குமார் யாதவ் தங்களுக்கு உளவு பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சஞ்சய் குமார் கண்காணிக்கப்பட்டார். அவரது தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டது.
அப்போது பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களை மாவோயிஸ்டுகளுக்கு அவர் தெரிவித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பீகார் சிறப்பு போலீசார் கைது செய்தனர்,
அண்மையில் பீகாரின் கயாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications