பீகார் சட்டசபை தேர்தல் மோடி அரசுக்கு 'அக்னி பரீட்சை'.. அமெரிக்க அரசியல் வல்லுநர்கள்...
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலானது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என்று அமெரிக்கா அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்காவின் "Carnegie Endowment for International Peace"-ன் வல்லுநர்களான மிலன் வைஷ்ணவ், சாக்ஷம் கோஷலா ஆகியோர் எழுதிய தலையங்கத்தின் முக்கிய அம்சங்கள்:

- பீகார் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் என்ன முடிவெடுத்தாலும் அது மாநில எல்லைகளைத் தாண்டி எதிரொலிக்கவே செய்யும்.
- இத் தேர்தலானது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு மிகப் பெரிய அக்னி பரீட்சை போன்ற சவாலாகும்.
- பீகாரில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் அக்கட்சி பெரும்பான்மையை நோக்கி செல்வதற்கு உந்துதலாக அமையும்.
- பீகார் மாநிலத்துக்கு ரூ1.25 லட்சம் கோடி நிதி உதவி அளிப்போம் என்று கூட வாக்குறுதி அளித்திருந்தது மத்திய அரசு. ஆகையால் தேர்தலில் தோல்வி அடைந்தால் அது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.
- தேர்தல் முடிவுகளைப் பொறுத்து நிதிஷ்குமார்லாலு பிரசாத் யாதவின் கூட்டணி தொடருமா? முறியுமா என்பது தெரியவரும்.
- 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நிதிஷ்குமாரின் செல்வாக்கு சரிந்துள்ளதாக தோற்றம் உள்ளது.. அதேபோல் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போதைய தேர்தல் முடிவுகள் இருவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
- காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது காங்கிரஸ். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தோல்வியைப் பொறுத்து ராகுல் காந்தியின் தலைமைக்கான உடனடி தேவை குறித்த விவாதங்கள் எழலாம்.
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications