வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000.. தேர்தல் நெருக்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இந்த உதவி, முதலமைச்சர் நிச்சயம் சுய உதவிப் படிகள் திட்டம் கீழ் வழங்கப்படும். இது பட்டதாரிகள் வேலை தேடும் வரை, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என பீகார் அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக, இத்திட்டம் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட கலை, அறிவியல் மற்றும் வணிக பட்டதாரிகளும் இதற்குத் தகுதி பெறுவார்கள். அவர்கள் வேலை இல்லாமல், சுய தொழில் செய்யாமல், அல்லது மேல்படிப்பில் சேராமல் இருந்தால் மட்டுமே இந்தப் பலனைப் பெற முடியும்.

Bihar unemployment job jobs

இந்த அறிவிப்பு, பீகாரில் குறிப்பாக படித்த இளைஞர்களிடையே உள்ள வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. நிதீஷ் குமார் கூறுகையில், 2005 இல் தனது அரசு பதவியேற்றது முதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நாங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளோம் என கூறியுள்ளார்.

"இந்த நிதியுதவி இளைஞர்களுக்குப் பயிற்சி பெறவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவும் என்று நம்புகிறேன். இதன் மூலம் அவர்கள் வலுவான எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள்," என்று நிதிஷ்குமார் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் திட்டம் பீகார் அரசின் "7 உறுதிமொழிகள்" திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது இளைஞர்களுக்கு அதிகாரத்தை வழங்குதல் மற்றும் இளைஞர் நலன் துறையின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது. தகுதியான விண்ணப்பதாரர்கள் http://7nishchay-yuvaupmission.bihar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், அரசு விரைவில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி பீகார் முழுவதும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர வேலைவாய்ப்பைப் பெற அவர்கள் முயற்சிக்கும் இந்த காலகட்டத்தில் இது ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்கும். இருப்பினும், தேர்தலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியானதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, இதை ஒரு அரசியல் நகர்வு என்று விமர்சித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+