ஜெ.வுக்காக பீகாரில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு: முதல்வர் நிதிஷ்குமார்
ஜெயலலிதாவுக்கு பீகாரில் ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
பாட்னா: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பீகார் மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதலே அவர் பூரண குணமடைய வேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இன்று ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தம்முடைய ஆழ்ந்த இரங்கலை நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெயலலிதாவின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பீகார் மாநிலத்தில் ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications