முடிவுக்கு வந்த நிதிஷ் ஆட்சி.. பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்! யார் இந்த சாம்ராட் சவுத்ரி
பாட்னா: பீகார் மாநிலத்தில் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்த நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகத் தேர்வாகியுள்ளார்.
பீகார் அரசியலில் "மாற்றம் ஒன்றே மாறாதது" இது ஒரு தினசரி நிகழ்வு! பல அதிரடித் திருப்பங்கள் அங்கு அசால்டாகவே நடக்கும். இதற்கிடையே பீகாரின் புதிய முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இதுவரை நடந்த சம்பவங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

பீகார் தேர்தல்
கடந்த 2025 நவம்பரில் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் - பாஜக உள்ளடங்கிய என்டிஏ கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களை அள்ளி ஒரு இமாலய வெற்றியை ருசித்தது. மொத்தம் உள்ள 243 இடங்களில், பாஜக 89 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க, நிதிஷ் குமாரின் ஜேடியு 85 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. மறுபுறம், தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி வெறும் 25 இடங்களோடு பலத்த சரிவைச் சந்தித்தது.
தேர்தல் முடிந்த கையோடு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றாலும், அப்போதே முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் மாற்றப்படலாம் என்று செய்திகள் உலா வரத் தொடங்கின. இந்தச் சூழலில் தான் வெறும் ஐந்தே மாதங்களில் இப்போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்கு செல்வதாக அறிவித்தார்..
நிதிஷ்குமார்
பீகார் சட்டசபை, மேலவை, நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா என அனைத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் ராஜ்யசபா மட்டும் மிச்சம் இருந்ததாலேயே உறுப்பினராகத் தேர்வானதாக நிதிஷ் கூறியிருந்தார். இருப்பினும், வெளிப்படையாக அவர் இப்படி சொன்னாலும் கூட பாஜகவின் அழுத்தமே பிரதான காரணம் எனச் சொல்லப்பட்டது.
சாம்ராட் சவுத்ரி
இந்தச் சூழலில் தான் பீகார் பாஜகவின் முகமாக அறியப்படும் சாம்ராட் சவுத்ரி அங்கு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பீகாரில் 'நிதிஷ் சகாப்தம்' மெல்ல முடிவுக்கு வந்து, பாஜகவின் நேரடி ஆட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது! பீகார் பாஜக மாநிலத் தலைவராக இந்த சவுத்ரி, நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியில் துணை முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இடையில் 2022 ஆகஸ்ட் மாதம், அப்போது நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறி, லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியுடன் இணைந்து 'மகாகத்பந்தன்' ஆட்சியை அமைத்தார். அப்போது "நிதிஷ் குமாரை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை எனது தலைப்பாகையைக் கழற்ற மாட்டேன்" எனச் சபதம் எடுத்து, பீகார் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியவர் தான் இந்த சாம்ராட் சவுத்ரி.
விட்டுக்கொடுத்த நிதிஷ்
பலமுறை பல கூட்டணிகளுக்குத் தாவிய நிதிஷ் குமார், இந்த முறை முதலமைச்சர் பதவியை பாஜகவிடம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 2029 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பீகாரில் ஒரு வலுவான ஓபிசி முகத்தை முதலமைச்சராக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே சாம்ராட் சவுத்ரியின் இந்த புரமோஷன் நடந்துள்ளது.
நாளை பாட்னாவில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்புள்ளது. அவருடன் இரண்டு துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதில் ஒரு துணை முதல்வர் பதவி நிதிஷ் கட்சிக்குச் செல்லும் எனத் தெரிகிறது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications