பீகார் தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு? களைகட்டும் 'பெட்டிங்'; நிதிஷ்-லாலு கூட்டணிக்கு 'ஏக கிராக்கி'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் வெல்லப் போவது யார் என்கிற தேர்தல் கருத்து கணிப்புகளை விட சட்டவிரோதமாக நடைபெறும் 'பெட்டிங்"தான் இப்போது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. நிதிஷ்- லாலு கூட்டணி சுமார் 127 முதல் 129 இடங்கள் வரை கைப்பற்றும் என்கின்றது இந்த "பெட்டிங் சந்தை".

பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. 4வது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

Bihar polls: Grand Alliance displaces NDA in satta race

தற்போது தேர்தல் நடைபெறுவதால் கருத்து கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பீகாரில் வெல்லப் போவது யாரு? என்கிற சட்டவிரோத பெட்டிங் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கூட்டணிக்கு சாதகமாகத்தான் பெட்டிங்கில் ஈடுபட்ட புக்கிகள் பணம் கட்டி வந்தனர். ஆனால் வெள்ளிக்கிழமையன்று நிலைமை நிதிஷ்- லாலு கூட்டணி பக்கம் சாய்ந்திருக்கிறது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் நிதிஷ்- லாலு கூட்டணி 127 முதல் 129 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பெட்டிங் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணிக்கு 150 இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் பெட்டிங் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+