பீகார்: பள்ளி முதல்வரை அடித்தே படுகொலை செய்த மக்கள்!!
Subscribe to Oneindia Tamil
நாளந்தா: பீகார் மாநிலம் நாளந்தாவில் பள்ளி முதல்வர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்தே படுகொலை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் நாளந்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதை அடுத்து ஆத்திரமடைந்த அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் பள்ளியின் உடமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

மேலும் பள்ளி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரை கம்புகளால் மிகக் கடுமையாக தாக்கினர். இதில் ரத்த காயங்களுடன் அவர் நிலை குலைந்தார்.
அங்கே வந்த போலீசார் பள்ளி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி முதல்வர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications