"கவசம் போல.." ரயிலுக்கு அடியில் திக் திக்.. தன் உயிரை துச்சமென நினைத்து மகள்களை காப்பாற்றிய தாய்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் தனது குழந்தைகளைக் காப்பாற்றத் துணிச்சலாகப் பெண் ஒருவர் செய்த காரியம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
எப்போதும் தாய்க்குத் தனது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் இருக்கும். மனிதர்கள் என்று சிங்கம், புலி, நாய், குரங்கு என அனைத்து விலங்குகளிலும் இந்த தாய்மை உணர்வு அதிகமாக இருக்கும்.

விலங்குகள் தங்கள் குட்டிகளைக் காப்பாற்ற எந்தவொரு எல்லைக்கும் செல்லும். மனிதர்களுக்கும் இதேதான் தனியாகச் சொல்லத் தேவையில்லை. தாய்மார்கள் தங்கள் குழந்தையைக் காக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
பீகார் சம்பவம்: அப்படியொரு சம்பவம் தான் இப்போது பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகாரின் பார்ஹ் ரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை தண்டவாளத்தில் பெண் ஒருவர் சிக்கிக் கொள்ள அவருக்கு மேல் ரயில் மின்னல் வேகத்தில் சென்றது. இருப்பினும், உயிரைப் பணயம் வைத்த அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
"கிறிஸ்மஸ் தாத்தா!" மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ரோஜா தந்த சர்ப்ரைஸ்! அடுத்து நடந்த செம சம்பவம்
அதில் அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கவசம் போல காப்பாற்றியது தெளிவாகத் தெரிகிறது. அந்த பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்தபடியே தனது குடும்பத்தினரைக் காப்பாற்றி இருக்கிறார். அந்தப் பெண்ணும் அவரது குழந்தைகளும் பெகுசராய் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸில் குடும்பத்துடன் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
கூட்டம் அதிகம்: சனிக்கிழமை பர்ஹில் ரயிலில் ஏறும் போது, நடைமேடையில் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய அந்த பெண் தனது குழந்தைகளுடன் தண்டவாளத்தில் விழுந்தார்.
கவசம் போல: இதை அங்கிருப்பவர்கள் கவனித்துக் காப்பதற்குள் ரயில் நகரத் தொடங்கிவிட்டது. ரயிலை நிறுத்த முடியாத நிலையில், அங்கிருந்தவர்கள் பதறிப்போனார்கள். இருப்பினும், தண்டவாளத்தில் இருந்த அந்த பெண் துளியும் பதற்றம் இல்லாமல், அப்படியே நிலத்துடன் ஒட்டி படுத்துள்ளார். தனது இரு குழந்தைகள் தெரியாமல் கூட எழுந்துவிடக் கூடாது என்பதால் அவர்களைக் கவசம் போல அரவணைத்துப் படுத்துள்ளார்.
ரயில் அங்கிருந்த சென்றவுடன் அந்த பெண்ணையும் குழந்தைகளையும் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள். அங்கிருந்து சிறு கற்கள் தாக்கியதில் அவருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications