For Daily Alerts
Just In
குவைத் ஏர்வேஸ் விமானம் மீது பறவை மோதல் - பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கம்
தானே: குவைத்திலிருந்து மும்பை வருகின்ற குவைத் எர்வேஸ் விமானத்தின் மேல் பறவை மோதிய காரணத்தினால் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
குவைத்திலிருந்து மும்பை நோக்கி பயணிக்கும் குவைத் ஏர்வேஸ் விமானம் கேயூ301. நேற்று வழக்கம் போல குவைத்திலிருந்து விமானம் மும்பை நோக்கி புறப்பட்டபோது விமானத்தின் காக்பிட் ஜன்னல் மீது பறவை மோதியது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மீண்டும் குவைத் விமான நிலையத்திற்கே திரும்பிய விமானம் பயணிகளுடன் மற்றொரு விமான தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனை குவைத் செய்தித் தொடர்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கிட்டதட்ட 65 சதவீத விபத்துகள் பறவைகள் விமானத்தில் மோதுவதால்தான் ஏற்படுவதாக ஆய்வொன்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Kuwait Airways flight KU301 from Kuwait to Mumbai made an emergency landing after a bird crashed into the plane’s cockpit window, the airline confirmed Thursday.
Story first published: Friday, August 28, 2015, 11:45 [IST]