கேரளாவில் வேகமாகப் பரவம் பறவைக் காய்ச்சல்.. இதுவரை 12 பேர் பலி.. பொதுமக்கள் பீதி
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்பட பல மாநிலங்களை பறவை காய்ச்சல் வேகமாக தாக்கியது. இந்த மாநிலங்களில் இந்த காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகினர்.
கேரளாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இறைச்சி கோழிகள் கொண்டு செல்ல சில மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து பறவை காய்ச்சலை கட்டுபடுத்த கேரள சுகாதார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பயனாக இந்த காய்ச்சல் அங்கு கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் இரண்டு வருடங்களாக தலை காட்டாமல் இருந்த பறவை காய்ச்சல் தற்போது அங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை மட்டும் 12 பேர் பலியாகி உள்ளனர்.
கர்ப்பிணிகள் உள்பட 800 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 51 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்கு கடும் பீதி நிலவுகிறது. இதையடுத்து இந்த நோயை கட்டுபடுத்த கேரள சுகாதார துறை மீண்டும் களம் இறங்கியுள்ளது.
தற்போது கேரளாவில் மழை காலம் என்பதால் பறவை காய்ச்சலை உருவாக அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே இந்த வைரஸ்களை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை கேரள சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து வரும் இறைச்சி கோழிகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து கேரளா ஆலோசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications