கடவுளே ஆனாலும் ராமர் செய்தது தப்பு... பாட்னாவில் ஒரு பரபரப்பு கேஸ்!
பாட்னா: ராமர், தனது மனைவி சீதையை, ஒரு சலவைத் தொழிலாளியின் குற்றச்சாட்டை மட்டும் அடிப்படையாக வைத்து கைவிட எடுத்த முடிவு அநீதியானது என்று கூறி பீகார் மாநிலத்தில் ஒருவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் பாட்னா கோர்ட்டில் ஒரு வழக்குப் போட்டுள்ளார்.
அதில், கடவுள் ராமர், தனது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டு விட்டார். இந்த முடிவை அவர் சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து எடுத்துள்ளார்.

இந்த முடிவு அநீதியானது. முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியைத் தண்டித்துள்ளார் ராமர்.
அண்ணன் ராமரின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இரு்துள்ளார். உண்மைகளை அறியாமல் லட்சுமண், தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார். இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார் இந்த வழக்கறிஞர். இந்த மனுவை என்ன செய்வது என்று கோர்ட் விசாரித்து முடிவை அறிவிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications