மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா vs பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மம்தாவின் இமேஜ் அங்கு மிகப் பெரியதாக இருந்தாலும் கூட இந்த முறை அதை காலி செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அங்கு பாஜகவுக்குச் சாதகமாக மொத்தம் 7 பாயிண்டுகள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அங்கு மம்தாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. இதற்கிடையே அங்கு பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் 7 முக்கியமான பாயிண்டுகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஏழு பிரச்சனைகள்
1. மம்தா இப்போது வரையிலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளைத் தான் எதிர்த்து வருகிறார். பாஜகவை எதிர்த்து நேரடியாக அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். முதலில் எஸ்ஐஆர் இப்போது அதிகாரிகள் பணியிட மாற்றம். பாஜகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு, தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகிறார். இது கிராமப்புற வாக்காளர்களிடையே ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்றாலும் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும், உச்ச நீதிமன்றமும் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டதால் ஆரம்பமே பிரச்சனையாகிவிட்டது.
2. அடுத்து முந்தைய தேர்தலைப் போல இல்லாமல்.. பாஜக இந்த முறை தேவையற்ற தவறுகளைத் தவிர்த்துள்ளது. திரிணாமுல் ஆட்சி மீதே நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. மம்தாவின் வயது அல்லது அவரது உடல்நிலை என பெர்சனலாக எதுவும் போகவில்லை. திரிணாமுல் ஆட்சி மிரட்டி பணம் பறிக்கும் அரசியலை நடத்துகிறது, ஆட்சியில் ஊழல் என நிர்வாகத்தில் இருக்கும் பிரச்சினைகளையே முன்வைக்கிறது. இதன் மூலம் மம்தாவால் அனுதாப அலையைத் தேட முடியாமல் போகிறது.
நேரடி போட்டி
3. அடுத்து முதல்வர் மம்தாவின் பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரியை களமிறக்குவது.. 2021ல் இப்படி தான் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்றார். இது மம்தாவின் இமேஜை கடுமையாகப் பாதித்தது. மீண்டும் இதுபோல நடந்துவிடக்கூடாது என்பதில் மம்தா தெளிவாக இருக்கிறார். இந்தச் சூழலில் மீண்டும் சுவேந்து அதிகாரி அங்கு இறங்கியுள்ளதால் மம்தா பவானிபூரில் கூடுதலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் மாநிலம் தழுவிய பிரச்சாரங்களுக்கான நேரம் குறையலாம்.. இதன் மூலம், பாஜக அவரை உடல் மற்றும் மனரீதியாக முடக்குகிறது.
இந்த யுக்தியைத் தேர்தலில் அறிமுகப்படுத்தியதே ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் தான். கடந்த 2015ல் அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு எதிராக புது டெல்லியில் களமிறங்கிய கெஜ்ரிவால், அவரை தோற்கடித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜகவும் அதே உத்தியை கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பயன்படுத்தியது தனிக்கதை. இப்போது மேற்கு வங்கத்திலும் இதையே பாஜக கையில் எடுத்திருக்கிறது.
பாஜகவின் மெசேஜ்
4. திரிணாமுலின் கோட்டையான கொல்கத்தா மையப்பகுதியில் சுவேந்து அதிகாரி போட்டியிடுவது, "பத்ரலோக்" சமூகத்தினர் உட்பட வாக்காளர்களுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது.. திரிணாமுலுக்கு ஒரு நம்பகமான மாற்று உள்ளது அது பாஜக தான்.. எனவே தைரியமாக எங்களுக்கு வாக்களிக்கலாம் என்கிறது. இங்கு திரிணாமுலின் கோட்டையை பாஜகவால் உடைக்க முடிந்தால், அந்த உத்வேகத்தை வட மற்றும் தென் மாவட்டங்களுக்கும் பாஜக கொண்டு செல்லும்.
5. கருத்துக்கணிப்புகளை முழுமையாக நம்ப முடியாது என்றாலும் கூட தற்போது வரை வந்துள்ள செய்திகள் பாஜகவுக்கு நல்ல செய்திகளாகவே உள்ளன. IANS-Matrize கருத்துக் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸ் 43-45% வாக்குகளையும் பாஜக 41-43% வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கின்றன. அதாவது இரு தரப்பிற்கும் இடையே மிக கடுமையான போட்டியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 43% வாக்குகள் என்பது பாஜகவிற்கு 120க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றுத்தரும் என்பதைக் காட்டுகிறது. இந்த கடும் போட்டியே கூட திரிணாமுலின் தோல்வி எனச் சொல்லலாம்.
தேர்தல் ஆணையம்
6. அடுத்துத் தேர்தல் கட்டங்கள். கடந்த முறை மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தலில் மிகப் பெரிய வன்முறை நடந்தது. மீண்டும் அதுபோல நடந்துவிடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவை முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதை சுமுகமாக நடத்தப் பல ஆயிரம் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
7. அதேபோல மம்தாவின் அதீத செயல்பாடுகள் இந்த முறை தேர்தல் ஆணையத்திடமோ அல்லது உச்ச நீதிமன்றத்திடமோ எடுபடவில்லை என்பதை வாக்காளர்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்.. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அவரது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. மேலும், பெயர் விடுபட்ட வாக்காளர்களின் மேல்முறையீடுகளை நீதித்துறை அதிகாரிகளே தீர்ப்பார்கள், இந்த விவகாரத்திலும் அவரது அரசியல் எடுபடாமல் போய்விட்டது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
மகளிர் உரிமை தொகை டூ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வரை.. 10 வாக்குறுதிகளை கொடுத்த மம்தா பானர்ஜி! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்













Click it and Unblock the Notifications