அடிச்சு தூக்கிய பாஜக.. நாகலாந்தில் மீண்டும் மலர்கிறது பாஜக.. எக்ஸிட் போல் முடிவில் அதிரடி
நாகாலாந்து எக்ஸிட் தேர்தல் கணிப்புகளை தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன
கோஹிமா: நாகாலாந்தில் இன்றைய தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கான எக்ஸிட் போல்கள் வெளியாகி உள்ளன.. அந்த வகையில், நாகாலாந்தில் என்டிபிபி- பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தை பொறுத்தவரையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில், கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது..

பாஜக வேட்பாளர்
ஆனால் என்டிபிபி 18 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் என 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத ஜனநாயக முன்னணி, சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது. இப்போது, உள்ளூர் நாகா கட்சி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜக - என்டிபிபி கூட்டணி அமைத்து 20 - 40 என்ற விகிதத்தில் தேர்தல் களம் காணுகிறது. அதே போல, காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்.பி.எப். 22 இடங்களிலும் களம் காணுகின்றன.. மொத்தமுள்ள 60 இடங்களில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது..

வடகிழக்கு ஜனநாயக முன்னணி
அதாவது நாகலாந்தில் அகுலுடோ சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் திடீரென வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டார். எனவே, மற்ற 59 இடங்களில் இன்று தேர்தல் நடந்து முடிந்தது. பாஜக கூட்டணி + நாகா மக்கள் முன்னணி + காங்கிரஸ் + ஜனதா தளம், ஆம் ஆத்மி + ஆர்பிபி + வடகிழக்கு ஜனநாயக முன்னணி போன்ற புதிய கட்சிகளும் தேர்தல் களமிறங்கின..

அதிரடி பிரச்சாரம்
இதில் ஆளும் கட்சி இங்கு முழு வீச்சில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டது.. அதுபோலவே, கடந்த வாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா இருவருமே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.. இதற்கு பிறகு பிரதமர் மோடியும் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார்.. எங்கு திரும்பினாலும் பாஜகவின் பிரச்சாரங்களாகவே அம்மாநிலத்தில் தென்பட்டது.. ஆனால், காங்கிரஸோ பலவீனமடைந்தே தென்பட்டது.. பாஜகவை விமர்சித்து பிரச்சாரங்களை செய்தாலும், அந்த கூட்டணிக்கு இணையாக ஈடுகொடுக்க முடியாமல் போனதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிவந்தனர்.

கருத்து கணிப்புகள்
இந்நிலையில், இன்றைய தினம் கருத்து கணிப்புகள், அதாவது, எக்ஸிட் போல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.. அந்த வகையில் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகாலாந்தில் என்டிபிபி- பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி: 38-48 இடங்களையும், என்பிஎப் 3-8 இடங்களையும், காங்கிரஸ் 1-2 இடங்களையும் பிடிக்கும், மற்றவை 5-15 வரையிலான இடங்களை பிடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இது ஒரு கருத்து கணிப்புகள் என்றாலும்கூட, பெரும்பான்மையான இடங்களை பாஜக பிடித்துள்ளது, அக்கட்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications