மேகாலயாவிலும் உடைகிறது பாஜக கூட்டணி? ஒரு மாதத்திற்குள் முடிவு.. அமித் ஷா பிளான்! காரணம் இதுதான்
ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடனான கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும் என பாஜக தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் (NPP) தேசிய மாநாட்டில், எதிர் வரும் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லையென அக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா கூறியிருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், கட்சியின் மேகாலயா பொறுப்பாளருமான எம். சுபா ஆவோ, "ஒரு மாதத்திற்குள் ஆளும் NPP கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வரும்" என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி
மேகாலயாவில் தற்போது தேசிய மக்கள் கட்சியின் (NPP) தலைமையின் கீழ் மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியுடன் 6 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. பாஜக சார்பில் இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். கடந்த 2018ல் நடைபெற்ற அம்மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் காங்கிரசுக்கு அடுத்த இடத்தைதான் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

கூட்டணியிலிருந்து விலகல்?
மாநிலத்தில் இரு கட்சிக்கு இடையேயும் மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் (NPP) தேசிய மாநாட்டில், எதிர் வரும் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லையென அக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக, NPP கட்சியுடனான கூட்டணி நீடிக்குமா இல்லையா என ஒரு மாதத்தில் முடிவு செய்யப்படும் என பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், கட்சியின் மேகாலயா பொறுப்பாளருமான எம். சுபா ஆவோ கூறியுள்ளார்.

கைது
இது குறித்து கட்சியின் பல்வேறு மட்டங்களில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், மாநில அரசு மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை கட்சி ஆய்வு செய்து வருவதாகவும், அனைத்து ஆவணங்களையும் திரட்டிய பின்னர் சிபிஐக்கு புகார் அளிக்கும் எனவும் சுபா ஆவோ கூறியுள்ளார். இந்த மோதல் போக்கு பாஜகவின் அம்மாநில துணைத் தலைவரான பெர்னார்ட் என். மராக் கைது செய்யப்பட்டதிலிருந்து தீவிரமடைந்துள்ளது.

ஆர்ப்பாட்டம்
பெர்னார்ட் என். மராக், தனது பண்ணை வீட்டில் விபச்சாரம் செய்ததாக ஜூலை 25ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், மராக் வழக்கில் நியாயமான விசாரணையை கோரி துராவில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மேற்கு கரோ ஹில்ஸில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட துணை ஆணையரை நீக்கக் கோரி பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி இருந்தனர்.

விமர்சனம்
மேலும் இந்த பண்ணை வீடு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் சட்டமன்ற தேர்தல் நடைபெற 6 மாதங்களே உள்ள நிலையில் மாரக் மீது எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தவே அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கெனவே இரு கட்சிகளுக்கிடையே இருந்த உரசல்கள் தற்போது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதன் விளைவே பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், கட்சியின் மேகாலயா பொறுப்பாளருமான எம். சுபா ஆவோவின் பேட்டி என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications