”சத்தியமா நான் ஏழைங்கோவ்” சொல்கிறார் பாஜகவின் பெரும்பணக்காரர் ஸ்ரீராமுலு

Subscribe to Oneindia Tamil

பெல்லாரி: "நான் ஒரு சாதாரண ஏழை" என்று மனசாட்சியே இல்லாமல் கூறியுள்ளார் பாஜகவின் கோடீஸ்வரரான ஸ்ரீராமுலு.

மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடவுளின் உதவியை நாடும் வகையில் கருப்பு பசுக்களுக்கு தானியங்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ''என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. நான் எந்த குற்றத்திற்காகவும் தண்டனை பெறவில்லை. நான் ஒரு சாதாரண ஏழை. என்னுடைய தந்தை ரெயில் நிலையத்தில் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தவர்'' என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் ஸ்ரீராமுலு இந்த தேர்தலில் தாக்கல்செய்துள்ள வேட்புமனுவில் தனக்கு ரூபாய் 15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். அவரது வீடு மிகப்பெரிய உணவகத்தை போன்று நீச்சல் குளம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளோடு பிரம்மாண்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு திட்டமிட்ட கொலை வழக்கிலும், சுரங்க ஊழல் புகாரிலும் ஸ்ரீராமுலு சிக்கியிருந்தார்.

சமீபத்தில் ஸ்ரீராமுலு வாக்காளர்களை கவரும் வகையில் தனது நண்பர்கள் ,ஆதரவாளர்களின் மூலம் பணம் பரிசு பொருட்களை கொடுத்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் அவரது நண்பர்கள் வீட்டிலிருந்து ரூபாய் 20 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+