மக்களே எனக்கு ஓட்டு போடுங்கள்.. இல்ல நான் தூக்குல தொங்குவேன்- மாஸ் காட்டும் பாஜக வேட்பாளர்
Recommended Video

ஜெய்ப்பூர்: வருகிற சட்டசபை தேர்தலில் எனக்கு வாக்களிக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் ஸ்ரீசந்த் கிருப்லானி மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும் போராடி வருகிறது.
200 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ராஜஸ்தான் சட்டசபையில் அமைச்சராக உள்ளவர் பாஜகவின் ஸ்ரீசந்த் கிருப்லானி ஆவார். நிம் பஹாரா தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி
இதையடுத்து சித்தோட்கட் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது பாஜகவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசினார். அவர் கூறுகையில் நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

வித்தியாசமான முறை
அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது போன்ற வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் தெலுங்கானாவிலும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

வித்தியாசம்
இந்த தேர்தலில் டிஆர்எஸ் , பாஜக , தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அனைவரையும் தூக்கிச் சாப்பிடும்படியாக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் வித்தியாசத்தை கடைபிடித்துள்ளார். ஜக்டியல் மாவட்டத்தில் கொருட்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் அகுலா ஹனுமந்த்.

காங் ஆட்சி
இவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது ஒரு ஜோடி செருப்பை வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கிறார். எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தன்னை பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடிக்குமாறு கூறி வாக்கு சேகரிக்கிறார்.












Click it and Unblock the Notifications