காஷ்மீர் மக்கள் பொறுமையை இழந்தால் காணாமல்போய் விடுவீர்கள்.. மத்திய அரசுக்கு மெஹபூபா முப்தி எச்சரிக்கை
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மக்கள் பொறுமையை இழந்தால் நீங்கள் மறைந்து விடுவீர்கள் என்று மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காஷ்மீர் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தெற்கு காஷ்மீரின் குல்காமில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மெஹபூபா முஃப்தி கூறியதாவது:-

மக்கள் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்
பொறுமைக்கு தைரியம் தேவை. ஜம்மு -காஷ்மீர் மக்கள் சகித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொறுமை இழக்கும் நாளில், நீங்களும்(மத்திய அரசு) இருக்க மாட்டீர்கள். நீங்கள் மறைந்து விடுவீர்கள். நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; புரிந்துகொண்டு திருந்திக் கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வாஜ்பாய் வழி வேண்டும்
ஆப்கானிஸ்தானை பாருங்கள். அவ்வளவு பெரிய சக்தி கொண்ட அமெரிக்காவே தங்கள் படுக்கைகளை மடித்து அங்கு இருந்து திரும்ப வேண்டியிருந்தது. உங்களுக்கு (மையம்) இன்னும் வாய்ப்பு உள்ளது. (முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி) வாஜ்பாய்-ஜி(முன்னாள் பிரதமர் வாஜ்பாய்) இந்தியாவுக்கு வெளியில் பாகிஸ்தானிலும், இந்தியாவுக்கு உள்ளே ஜம்மு-காஷ்மீரிலும் பேச்சுவார்த்தையை தொடர்ந்தார். அவரது பாதையை பின்பற்றி இப்போதைய மத்திய அரசும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

சிதைத்துவிட்டீர்கள்
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், முந்தைய மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் நீங்கள் எங்களை சட்டவிரோதமாகவும், அரசியலமைப்பிலும் கொள்ளையடித்தீர்கள். ஜம்மு-காஷ்மீர் எங்களின் அடையாளம். அதனை நீங்கள் சிதைத்துவிட்டீர்கள். செய்த தவறுகளை உடனடியாக சரி செய்து விடுங்கள். இல்லையெனில் அது மிகவும் தாமதமாகிவிடும்.
Recommended Video

சிபிஐ இவர்கள் வசம்
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு என்ஐஏ, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் போன்ற மத்திய நிறுவனங்களை தவறான கருத்துகளை மற்றும் அரசியல் எதிரிகளை நசுக்குவதற்கு தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜக தனது வழிகளை சரிசெய்யாவிட்டால், இந்தியா வகுப்புவாத மற்றும் மத அடிப்படையில் பல பகுதிகளாக உடைந்து விடும்.

துப்பாக்கிகளின் பங்கு
தாலிபான்கள் அமெரிக்காவை ஆப்கானிஸ்தானிலிருந்து ஓடச் செய்தனர், ஆனால் இப்போது உலகம் அவர்களின் (தாலிபான்) நடத்தையை கவனித்து வருகிறது. தலிபான்கள் தாலிபான்கள் உலகத்தை தங்களுக்கு எதிராக செல்லும்படி கட்டாயப்படுத்தும் எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் துப்பாக்கிகளின் பங்கு முடிந்துவிட்டது. இவ்வாறு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications