சோனியா மருமகன் வதேராவின் 'நிலக் கொள்ளை'க்கு உடந்தையாக இருந்த அதிகாரியை சஸ்பென்ட் செய்தது ஹரியானா!!
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரி தல்பீர்சிங்கை ஹரியானா அரசு அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது.
ராபர்ட் வதேரா, ஹரியானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியை பயன்படுத்தி அம்மாநிலத்தில் அரசு நிலங்களையும் ஏழைகளின் நிலங்களையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஹரியானாவில் பரீதாபாத்தில் உள்ள சிர்ஷி கிராமத்தில் அரசு நிலத்தை ராபர்ட் வதேரா மிக, மிக குறைந்த விலைக்கு வாங்கி இருப்பதும், இதற்காக அரசு ஆவணங்களை திருத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய கணக்குத் தணிக்கைத் துறை இது தொடர்பாக நடத்திய ஆய்வில் ஹரியானாவில் ஒரு இடத்தில் மட்டும் அரசு நிலத்தை வாங்கி முறைகேடாக விற்றதில் ராபர்ட் வதேரா சுமார் ரூ.50 கோடி சம்பாதித்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று சமீபத்தில் ஹரியானாவில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு அறிவித்தது. இதனால் பயந்து போன ராபர்ட் வதேரா கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, தன் 7 ரியல் எஸ்டேட் நிறுவனங்களை மூடி விட்டார்..
இருப்பினும் ராபர்ட் வதேரா மோசடி குறித்து ஹரியானா மாநில அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. ராபர்ட் வதேரா செய்த மோசடிகளுக்கு குர்கான் - பரீதாபாத் மண்டலத்தில் நில நிர்வாக அதிகாரியாக இருந்த தல்பீர் சிங் பெரிய அளவில் உதவிகள் செய்தது தெரிய வந்தது. இதனால் அவர் கடந்த 11-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தல்பீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் அரியானாவில் கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications