லாலு குற்றவாளி- பாஜக வரவேற்பு! கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம்- காங். கருத்து!!
Subscribe to Oneindia Tamil

லாலு பிரசாத் மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷானவாஸ் ஹூசைன், பீகார் கருவூலத்தை சூறையாடியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் என்றார்.
பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஊழல் முறைகேட்டில் ஈடுபடுகிற யாராக இருந்தாலும் சட்டம் உங்களை விட்டு வைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சட்டம் தமது கடமையை செய்துள்ளது என்றார்.
காங்கிரஸின் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், சட்டம் தனி மனிதர்களை பார்ப்பது இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் தனிச் சட்டமும் இல்லை. சட்டம் தமது கடமையை செய்துள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications