”மொபைலிலும் வந்து மோடியை பேச விடுவோமே...” பா.ஜ.கவின் 'வாய்ஸ் போர்ட்டல்' பிரச்சாரம்
டெல்லி: புதிய தொழில்நுட்பங்களை உபயோகித்து பிரச்சாரம் செய்யும் யுக்தியை கண்டறிந்துள்ளது பா.ஜ.க .இது தற்போது மொபைலில் "வாய்ஸ் போர்ட்டல்" முறை பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் லட்சக்கணக்கான வோட்டுகளை பெறும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
இதற்கான வாய்ஸ் போர்ட்டல் எண் 02245014501 ஆகும். இதை பா.ஜ.கவின் தகவல் தொடர்பு பிரதிநிதி அரவிந்த் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணுக்கு அழைப்பதன் மூலம் நரேந்திர மோடியின் உரையை கேட்க முடியும்."ஒரு வாக்காளர் எதைப்பற்றி வேண்டுமானாலும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.உதாரணமாக லஞ்சம்,ஊழல்,பொருளாதார பிரச்சினைகள் பற்றிய செய்திகளை பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்"என்று கூறியுள்ளார் குப்தா.
பா.ஜ.க மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் ஏற்கனவே பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications