For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகாலாந்தில் கடும் இழுபறிக்கு நடுவே ஆட்சியை பிடிக்கிறது என்டிபிபி -பாஜக கூட்டணி!

நாகாலாந்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

    கோஹிமா: நாகாலாந்தில் ஆளும் என்பிஎஃப் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு என்டிபிபி -பாஜக கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 31 இடங்கள் இருக்க வேண்டும்.

    60 சட்டசபை தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு கடந்த 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே என்பிஎஃப் முன்னணியில் இருந்தது.

    BJP leads in 5 constituencies in Nagaland

    பின்னர் நேரம் ஆக ஆக டிரென்ட் மாறி என்டிபிபி - பாஜக கூட்டணி வெற்றி முன்னணி பெற்ற வண்ணம் இருந்தது.

    தற்போதைய நிலவரப்படி, நாகாலாந்து மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. அதுபோல் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. மற்ற கட்சிகள் இரு இடங்களில் வெற்றி பெற்று 1 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

    மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு 59 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்றது. எனவே பெரும்பான்மையை பிடிக்க 30 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டியது கட்டாயம் (60 தொகுதிகள் என்றால் 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்). இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக பாஜக கூட்டணி உருவாகியுள்ளதால், ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் இக்கூட்டணிக்கே அழைப்புவிடுப்பார். எனவே பிற கட்சிகள் ஆதரவோடு என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புள்ளது.

    English summary
    BJP alliance leads in 5 constituencies in Nagaland. As today assembly election poll counting begins.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X