திருடர்களைப் போல சத்தீஸ்கரை பாஜக கொள்ளையடித்துவிட்டது: ராகுல் தாக்கு

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: பாரதிய ஜனதா கட்சி திருடர்களைப் போல சத்தீஸ்கர் மாநில இயற்கை வளங்களை கொள்ளையடித்துவிட்டது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மும்முர பிரசாரத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Rahul gandhi

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ராகுல் காந்தியையும் சோனியாவையும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாரதிய ஜனதாவை கடுமையாக தாக்கி பேசினார்.

அப்போது, திருடர்களான பாரதிய ஜனதாவை எட்டி உதைகக் கூடிய 500 பேர் இந்தக் கூட்டத்தில் இருந்து எழுந்து நில்லுங்கள். கடந்த மே 25-ந் தேதி நந்த குமார் படேலை மாவோயிஸ்டுகள் கொன்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் இயற்கை வளம் மிக்க மாநிலம். ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியினர் திருடர்களைப் போல இந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துவிட்டனர் என்றார் ராகுல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+