நேற்று அடி, உதை: இன்று தங்கை.. தலையில் கை வைத்து பெண் நிர்வாகியிடம் மன்னிப்பு கோரிய பாஜக எம்எல்ஏ!
நரோடா: தேசிய வாத பெண் நிர்வாகியை தாக்கிய பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். தாக்கப்பட்ட நீது தேஜ்வானி என் தங்கையை போன்றவர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் நரோடா பகுதியைச் சேர்ந்தவர் நீது தேஜ்வாணி. இவர் அத்தொகுதியில் உள்ள ஒரு தண்ணீர் பிரச்சனைக்காக தீர்வு கேட்க பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானியின் அலுவலகத்திற்கு நேற்று சென்றர்.
அப்போது நீது என்ன சொல்கிறார் என்பதைக்கூட கேட்காமல் பல்ராம் தவானி அவரை அடித்து கன்னத்தில் அறைந்து கீழே தள்ளினார். மேலும் அவரை சரமாரியாக உதைத்தார்.

வைரலான வீடியோ
இதனை தடுக்க சென்ற நீதுவின் கணவரையும் அங்கிருந்த பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். பாஜக எம்எல்ஏ பெண் ஒருவரை தாக்கும் காட்சிகள் வைரலானது.

மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ
இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி தான் தாக்கிய தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியான நீது தேஜ்வானியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று நடந்த சம்பவம்
இன்று நீதுவுடன் சேர்ந்து பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று நடந்த சம்பவத்திற்காக நீது தேஜ்வானியிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனது சகோதரி பேன்றவர்
நீது தேஜ்வானி எனது சகோதரி போன்றவர். எங்களுக்குள் இருந்த தவறான புரிதல் தற்போது சரியாகிவிட்டது. நீது தேஜ்வானிக்கு எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என உறுதியளித்திருக்கிறேன் என பல்ராம் தேஜ்வானி கூறினார்.
|
ராக்கி கட்டியி நீது தேஜ்வானி
பேசும் போது நீது தேஜ்வானி தலையில் கை வைத்து அவர் மன்னிப்பு கேட்டார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியான நீதுவும் பல்ராம் தவானி கையில் ராக்கியை கட்டி தனது சகோதரராக ஏற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications