ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பாஜக எம்.எல்.ஏவுக்கு கொலைமிரட்டல்
லக்னோ: உ.பி., பாஜக எம்.எல்.ஏ, சங்கீத் சம் தனக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் இரு இணையதள போன் கால்களை ரிசீவ் செய்ததாகவும், தப்புத்தப்பாக ஹிந்தி பேசிய எதிர்முனை நபர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி என்று கூறி கொலைமிரட்டல்விடுத்தார்.

இன்று காலை 9.30 மணிக்கு அந்த மிரட்டல் அழைப்பு வந்ததாக கூறியுள்ளார். கொலையாளிகள் கிளம்பிவிட்டதாகவும், எந்த பாதுகாவலர்களும் உங்களை காப்பாற்ற முடியாது என்றும் எதிர்முனையில் பேசியவன் மிரட்டியதாக எம்.எல்.ஏ தனது புகாரில் கூறியுள்ளார்.
முசாபர்நகர் கலவரத்தில் பெயர் அடிபட்ட சங்கீத் சமை கொலை செய்ய இருமுறை முயற்சிகள் நடந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே இசெட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை துப்பாக்கி சூடு தாக்குதலும், மற்றொரு நாள், அவர் பேசிய பொதுக்கூட்டத்தின் அருகே குண்டு வெடித்தது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய சென்ற 3 இளைஞர்கள் நாக்பூரில் இன்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications