தீவிரவாதத்தை பரப்புகிறது.. வலதுசாரி இந்து அமைப்புக்கு தடை கேட்கிறார் பாஜக எம்.எல்.ஏ
டெல்லி: தீவிரவாதத்துக்கு ஈடான செயல்களில் ஈடுபட்டுவரும் சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வடக்கு கோவா பகுதியின் செயின்ட் ஆன்ட்ரே தொகுதி எம்.எல்.ஏ விஷ்ணு சூர்ய நாயக் வாக், கோரிக்கைவிடுத்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு ஜனநாயக நாட்டில் கருத்தை, கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறையால் கருத்தை எதிர்கொள்வது தீவிரவாத செயல். ஏனெனில், நமக்கு எதிராக கருத்து கூறிவிட கூடாது என்ற அச்ச உணர்வை கருத்தாளர்கள் மனதில் உருவாக்குவதுதான் இந்த தாக்குதல்களின் நோக்கம்.

2009ம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை பெற்ற உத்வேகத்தில், சனாதன் சன்ஸ்தா அமைப்பு முன்பைவிட தீவிர கதியில் செயல்பட்டுவருகிறது. முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் இந்த அமைப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
கர்நாடகாவில் செயல்படும் பிரமோத் முத்தாலிக்கின் ஸ்ரீராமசேனை அமைப்பு, மங்களூரில் மது பாரில் புகுந்து மது குடித்த இளம் பெண்களை அடித்து உதைத்தது. ஆனால் அதில் யாரும் சாகவில்லை. இருப்பினும் முத்தாலிக்கை கோவாவிற்குள் அனுமதிக்க அரசு தடைவிதித்துள்ளது. அப்படியிருக்கும்போது, குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்ப்டும், சனாதன் சன்ஸ்தா அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.
இஸ்லாமிய வலதுசாரிகளுக்கு சிமி போல, இந்து வலதுசாரி சிந்தனைகளை சனாதன் சன்ஸ்தா அமைப்பு தூண்டிவருகிறது. இவ்வாறு விஷ்ணு சூர்ய நாயக் தெரிவித்தார். பன்சாரேவை படுகொலை செய்தது இந்த அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் உள்ளிட்ட சிலர் சிக்கியுள்ளனர். மேலும் பலரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது; இதனால்தான் இப்போது இந்த அமைப்பின் பெயர் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications