சமூக ஆர்வலர் கைலாஷா? மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷா? பாவம் கன்ப்யூஸில் பாஜக!!
போபால்: அமைதிக்கான உயர்ந்த விருதாக நோபல் பரிசு வழங்கப்பட்ட சமூக ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தியை விட்டுவிட்டு மத்திய பிரதேச தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவார்கையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் பாஜகவினர்.
ஆதரவற்ற குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால் மத்தியப் பிரதேச பாஜகவினர் அந்த மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவார்கையாவுக்குதான் நோபல் பரிசு கிடைத்திருப்பதாகக் கருதி அவருக்கு வாழ்த்து களை கூறி வருகின்றனர்.
தொண்டர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை அமைச்சர் கைலாஷை தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் கைலாஷ் கூறியபோது, "நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியைவிட மத்தியப் பிரதேச மக்கள் மத்தியில் நான் பிரபலமாக உள்ளதால் என்னை தவறாக நினைத்து வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications