என்ன சித்தப்பு இப்படி பேசுறாரு இந்த எம்.பி....??
டெல்லி: ஆலங்கட்டி மழையை தடுக்க நடவடிக்கை எடுங்களேன் என்று பேசி மத்திய பாஜக அரசின் மானத்தை நாடாளுமன்றத்தில் வைத்து வாங்கி விட்டார் ஒரு பாஜக எம்.பி.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது பாஜக வைச் சேர்ந்த எம்.பி. திலிப் குமார்மன்சுக்லால் காந்தி என்பவர் பேசினார். அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆலங்கட்டி மழையால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

விவசாயிகளின் பயிர்களை பாதிக்கும் ஆலங்கட்டி மழையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார். இதைக் கேட்டதும் அவையில் கொல் என்று சிரிப்பலை எழுந்தது.
அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் எழுந்து சிரித்தபடியே, ஆலங்கட்டி மழை, நிலநடுக்கம் போன்றவை இயற்கை பேரிடர்கள். இத்தகைய இயற்கை இடர்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு, அறிவியல் வளர்ச்சி முன்னேற்றம் அடையவில்லை என்று பதிலளித்தார்.
அப்போதுதான் தான் பேசியதன் அர்த்தத்தை உணர்ந்தார் உறுப்பினர் காந்தி.












Click it and Unblock the Notifications