பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் 'தலைமறைவு' என கோர்ட் அறிவிப்பு!

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த மசூதி இடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை லக்னோவில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணையில் தொடர்ந்தும் பாஜக எம்.பி.யான சாக்ஷி மகாராஜ் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்பதற்காக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய விசாரணையிலும் சாக்ஷி மகாராஜ் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். ஆனால் சாக்ஷி மகாராஜின் வழக்கறிஞரோ, நாடாளுமன்றத்தில் அவர் இருப்பதாக கூறி சனிக்கிழமை வரை அவகாசம் கோரினார்.
இதை நீதிமன்றம் நிராகரித்து அவர் தலைமறைவானவர் என்று அறிவித்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications