பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: லோக்சபாவில் பாஜக எம்.பி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி ஆதித்யநாத் லோக்சபாவில் இன்று கோரிக்கைவிடுத்தார். இதை பிற பாஜ எம்.பிக்கள் வரவேற்றனர்.
பூஜ்ய நேரத்தில், பாஜக எம்.பி, யோகி ஆதித்யநாத் பேசுகையில், பகவத் கீதையின் உபதேசங்களுக்கான தேவை இப்போதுதான் அதிகரித்துள்ளது. ஜிகாதி தீவிரவாதத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பகவத் கீதையின் உபதேசம் நமக்கு தேவை.

என்றும் வாழும் தத்துவங்களையும், மனிதநேயத்துக்கான மதிப்பையும் ஏற்படுத்தும் நூல் பகவத் கீதை. குருக்ஷேத்திரத்தில், பகவத் கீதை மகோற்சவம் நடத்தப்பட்டது சிறந்த முன் உதாரணம். பள்ளிகளில் பகவத் கீதையை ஒரு பாடமாக சேர்க்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஆதித்யநாத் கோரிக்கைவிடுத்தார். இதற்கு பாஜக எம்.பிக்கள், ஆதரவு தெரிவிக்கும்விதமாக மேசையை தட்டி உற்சாகம் வெளி்ப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications