ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக கருத வேண்டாம்: பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைமை வார்னிங்!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆம் ஆத்மி கட்சியை லேசாக நினைத்துவிடாமல் தீவிர சவாலாக பாஜக கருத வேண்டும் என்று அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கத்காரி மற்றும் ராம்ல்லால் ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியை பாஜக தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும்.. லேசாக நினைத்துவிடக் கூடாது என்று மோகன் பகவத் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் தற்போதைய பாணியை மாற்றி பூத் கமிட்டி அமைப்பது உட்பட தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பாஜகவுக்கு மோகன் பகவத் அறிவுறுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications