பாஜக செயற்குழு கூட்டம் இன்று முதல் 2 நாட்களுக்கு... பேச்சாளர்கள் லிஸ்டில் “அத்வானி”க்கு நோ இடம்
பெங்களூரு: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதையொட்டி நேற்று உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் அங்கு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா உள்பட மொத்தம் 330 பாஜக தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேசிய செயற்குழு கூட்டம் இன்று முதல் பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் தேசிய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதபடுகிறது. இதற்கான காரணம் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்த பிறகு, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் முதன் முறையாக தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதே போல் பாஜக தேசிய தலைவராக அமித்ஷா பதவியேற்ற பின் முதன் முறையாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தில் பாஜகவை எப்படி வெற்றி பெறச் செய்வது என்றும், அது மட்டுமில்லாமல் அஸ்ஸாம், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் பேச உள்ளனர்.
மேலும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஒரு வருடத்தில் முக்கியமான நலத்திட்டங்கள் செயல்படுத்தினார்கள். இந்த திட்டங்கள் மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்த சாதனைகளை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பாஜக பொதுச் செயலாளரும், கர்நாடக பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவது இது 5 ஆவது முறையாகும். இந்த செயற்குழுவில் முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த செயற்குழு கூட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடி பேசவிருக்கும் பொதுக்கூட்ட இடமான பசவனகுடியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் பேசும் தலைவர்கள் பட்டியலில் அத்வானி பெயர் இல்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.