மேற்கு வங்கத்தில்...திரிணாமுல் தொண்டர்களால்... பாஜக அலுவலகம் சூறை...பாஜக பரபர குற்றச்சாட்டு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கி விட்டதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
ஆட்சி அதிகாரம் இருப்பதால் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என பாஜக கூறியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள திரிணாமுல் கட்சி, பாஜக பொய் சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்கம்

பாஜக துடிப்பு
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணாமுல் ஆட்சியை தக்க வைக்க முயன்று வருகிறது.பாஜக அங்கு ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடித்து வருகிறது.

பாஜகவில் இணைந்தார்
இதனால் பாஜக தலைவர்கள் அங்கு தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தே தீருவோம் என உறுதியாக உள்ள அமிஷ்ஷா, பல வியூகங்களை வகுத்து வருகிறார்.அதன்பலனாக கட்சியில், மக்களிடத்தில் செல்வாக்கு பெற்று விளங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுவேந்து அதிகாரி உள்பட பலர் பாஜகவில் இணைந்தனர்.

அலுவலகம் சூறை
இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் உள்ள சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கி விட்டதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் கனிஸ்கா பாண்டா கூறியதாவது:- நந்திகிராமில் சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை திரினாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சூறையாடினார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள அதிகார சக்தியைப் பயன்படுத்தி இவ்வாறு செய்கிறார்கள்.

அதிகார போதை
ஏனெனில் அதிகாரம் உங்களுடன் உள்ளது, அதனால்தான் நீங்கள் இவ்வாறு செய்கிறீர்கள். இதில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்று கனிஸ்கா பாண்டா கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு
ஆனால் பாஜகவின் இந்த குற்றசாட்டை திரினாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக மிட்னாபூர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.கே.சுபியன் கூறுகையில், அவர்கள் (பாஜக) எப்போதும் பொய் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பழைய பாஜக தொண்டர்கள்தான் சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை சூறையாடினர். ஆனால் பாஜக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. பாஜக எங்களை குறை கூறுவதை விட்டு விட்டு, தங்களது கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications