காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி முட்டை வாங்கியது!!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி முட்டை வாங்கி கோட்டை விட்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் ஆளும் கட்சியாக இருக்கிறது தேசிய மாநாட்டு கட்சி. அங்கு மொத்தம் 6 லோக்சபா தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது தேசிய மாநாட்டு கட்சி. அங்கு மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதா ஆகியவையும் மோதின.
6 தொகுதிகளில் 3 இடங்களை மெகபூபா முப்தி கட்சி கைப்பற்றியிருக்கிறது. 2 இடங்களில் பாஜகவும் சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.
ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் அங்கு தோல்வியைத் தழுவி உள்ளார். காங்கிரஸை சேர்ந்த மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் உதம்பூரில் போட்டியிட்டு அவுட் ஆகியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications