Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பு பணம் ஒழிப்பதில் மத்திய அரசின் முடிவில் மாற்றமில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கருப்பு பணம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்த முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, மக்களிடையே வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளதாக பாஜக நம்புகிறது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளின் முன் மக்கள் அவதிப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BJP Parliamentary Party executive meet ends

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவ: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ரூபாய் நோட்டுக்களை ஒழித்த முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளில்

மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடும். அந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை. மக்கள் மத்தியில் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்க் கட்சிகளின் கண்டனத்துக்கு பாஜக எம்பிக்கள் பதிலடி தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+