தேர்தல் வெற்றி எதிரொலி – வாஜ்பாயை சந்தித்தார் ராஜ்நாத் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து பாஜக கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங், அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.நரேந்திர மோடி, மே 21 அன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.இந்த நிலையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து பேசினார்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், "மோடியின் உழைப்பினால்தான் இந்த வெற்றி கிட்டியுள்ளது.காங்கிரஸ் மீதுள்ள மக்களின் நம்பிக்கை குறைந்ததே அவர்களின் தோல்விக்கு காரணம்.
அத்வானி பாஜகவின் மூத்த தலைவர்.அவருக்கு உரிய, தகுந்த பதவியானது ஆட்சி அமைந்ததும் முடிவெடுத்து அளிக்கப்படும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications