உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி.. பாஜக தேர்தல் அறிக்கை
டெல்லி: 12ம் வகுப்பு வரை மாணாக்கர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நல்வாழ்வுக்கான உறுதிமொழி என்ற பெயரில் கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா, மாநில தலைநகர் லக்னோவில் இன்று வெளியிட்டார்.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் 9 பிரிவாக தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் அறிக்கையில், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தில் சலுகை, மாநிலத்தின் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் தேர்வு ரத்து ஆகிய அதிரடி அறிவிப்புகள் உள்ளன.
50 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் எடுத்தால் கல்லூரி படிப்பு முடியும்வரையும் இலவச கல்வி என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, உத்தரப்பிரதேசத்தை தவிர, அருகேயுள்ள பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. உத்தர பிரதேசம் மட்டும்தான் முன்னேறவில்லை. உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியது. ஆனால் மாநிலத்தில் எதுவும் நடக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications