கர்நாடகா: ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மாரடைப்பால் மரணம்
கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
ஜெயநகரில் இருந்து பாஜக கட்சிக்காக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானவர் விஜயகுமார். தற்போது அந்த பகுதியின் எம்எல்ஏவாக அவர் இருக்கிறார். இந்த நிலையில் அதே தொகுதியில் தேர்தலில் 3வது முறையாக பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
நேற்று ஜெயநகரில் 4வது பிளாக்கில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது, இரவு ஒன்பது மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு இரவு பதினோரு மணி வரை சிகிச்சை நடைபெற்றது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணிக்கு மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 60 வயது ஆகும் இவர் கட்சி பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.
இவருக்கு ஏற்கனவே அதிக ரத்த கொதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க கோரி இருந்துள்ளனர். ஆனால் தேர்தல் காரணமாக நேற்று வீடு வீடாக பிரச்சாரம் செய்து இருக்கிறார்.