"எதிர்காலத்தில் காங்கிரஸில் நேரு குடும்பம் மட்டுமே எஞ்சியிருக்கும்".. கடுமையாக கலாய்த்த பாஜக
குவாஹாட்டி: காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக, "எதிர்காலத்தில் காங்கிரஸில் நேரு குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்" என்று விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி., மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவருமான குலாம் நபி ஆசாத் இன்று அதிரடியாக கட்சியில் இருந்து விலகினார். தனது விலகல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான நடவடிக்கையின் காரணமாகவே 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு காங்கிரஸில் இருந்த ஆலோசனை முறைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு தனது ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை குலாம் நபி ஆசாத் சுமித்தியுள்ளார்.
இந்நிலையில், குலாம் நபி ஆசாத் விலகல் குறித்து அசாம் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். குலாம் நபி ஆசாத்தும் இதனை காரணமாக கூறியே விலகியுள்ளார். குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தையும், நான் 2015-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய போது அளித்த ராஜினாமா கடிதத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதை காணலாம்.
ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்றவர் என்பது காங்கிரஸில் உள்ள எல்லோருக்கும் தெரியும். சோனியா காந்தி கட்சிக்கு தலைமை வகிக்க விரும்பவில்லை. தனது மகன் ராகுல் காந்தியை முன்னுக்கு கொண்டு வருவதிலேயே அவர் குறியாக இருக்கிறார். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி. காங்கிரஸுக்கு விசுவாசமானவர்கள் வரிசையாக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இப்படியே சென்றால், காங்கிரஸில் நேரு குடும்பத்தினர் மட்டுமே இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications