"எதிர்காலத்தில் காங்கிரஸில் நேரு குடும்பம் மட்டுமே எஞ்சியிருக்கும்".. கடுமையாக கலாய்த்த பாஜக
குவாஹாட்டி: காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக, "எதிர்காலத்தில் காங்கிரஸில் நேரு குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்" என்று விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி., மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவருமான குலாம் நபி ஆசாத் இன்று அதிரடியாக கட்சியில் இருந்து விலகினார். தனது விலகல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான நடவடிக்கையின் காரணமாகவே 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு காங்கிரஸில் இருந்த ஆலோசனை முறைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு தனது ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை குலாம் நபி ஆசாத் சுமித்தியுள்ளார்.
இந்நிலையில், குலாம் நபி ஆசாத் விலகல் குறித்து அசாம் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். குலாம் நபி ஆசாத்தும் இதனை காரணமாக கூறியே விலகியுள்ளார். குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தையும், நான் 2015-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய போது அளித்த ராஜினாமா கடிதத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதை காணலாம்.
ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்றவர் என்பது காங்கிரஸில் உள்ள எல்லோருக்கும் தெரியும். சோனியா காந்தி கட்சிக்கு தலைமை வகிக்க விரும்பவில்லை. தனது மகன் ராகுல் காந்தியை முன்னுக்கு கொண்டு வருவதிலேயே அவர் குறியாக இருக்கிறார். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி. காங்கிரஸுக்கு விசுவாசமானவர்கள் வரிசையாக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இப்படியே சென்றால், காங்கிரஸில் நேரு குடும்பத்தினர் மட்டுமே இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
திடீரென மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்.. கைத்தாங்கலாக தூக்கி வந்த காங்கிரஸ் நிர்வாகிகள்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில்












Click it and Unblock the Notifications