மத்தியில் பாஜகவை ஆட்சியில் உட்கார வைத்த உ.பி.! 73 தொகுதிகளை அள்ளி கொடுத்தது!!
போபால்: உத்தரப்பிரதேசத்தில் டபுள் ஸ்டிராங் மோடி சுனாமி வீசியதைப் போல 73 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன.

பாஜக- 73
இங்கு 73 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

சமாஜ்வாடி- 5
அதற்கு அடுத்த இடத்தில் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது

காங்- 2
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. மற்றொரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

அள்ளிக் கொடுத்த உ.பி
உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களைப் பெறும் மாநிலம்தான் மத்தியில் ஆட்சியில் அமைக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது 73 இடங்களை அள்ளிக் கொடுத்து பாஜகவை அரியணையேற்றியிருக்கிறது.

அன்று ஜனதா..
குஜராத் பிரதமர் 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி, இதே உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது குஜராத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய்தான் பிரதமரானார்

இன்று பாரதிய ஜனதா- குஜராத் பிரதமரே
இப்போது 2014ஆம் ஆண்டும் அதே உத்தரப்பிரதேசம்தான் அதிக இடங்களை பாஜக வுக்கு கொடுத்திருக்கிறது. இப்போதும் குஜராத்தைச் சேர்ந்த நரேந்திர மோடிதான் பிரதமராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications